அஞ்சியத்தை மகள் நாகையார்
- இப்பெண் புலவர் அஞ்சி என்பானின் அத்தைமகள் ஆகையால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இந்த அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சி இவர் தன் அத்தை மகன் அஞ்சியின் புகழைப் பாடும் நூலில் இருந்த பாடல்களைப் பாணன் ஒருவன் புதிய பண் அமைத்துப் பாடியபோது கேட்டு மகிழ்ந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.
- நாகு என்னும் சொல் இளமையைக் குறிக்கும். இந்த வகையில் இவர் பெயர் அமைந்திருக்கலாம். அல்லது இப்புலவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம்.
சங்க இலக்கியங்களில் இவரது பெயரில் ஒரே ஒரு பாடல் காணப்படுகிறது.
- அகம்: 352 குறிஞ்சி
கருத்துகள்
கருத்துரையிடுக