இடுகைகள்

பெண்ணே

குற்றம் அறுப்பவரென்றே வந்தார் குற்றம் கூற்றம் ஆனாரென்றே அறிவிக்கும் ஏடால் முற்றும் குமுகமதனை நினைத்தே குமுறுகிறேன்! பெற்ற அவளைப் பேதை யொருவன்  உற்ற அன்பினையே உதறித் தள்ளி கூற்ற வடிவெய்தி குடிகெடுத்தான்  மாற்றமிதனை எப்படி ஏற்பார் இங்கெவரும்? உடன்பிறந்தாள் உயிர்வதையுற் றீன்றெடுத்தாள் மடமுணர்ந்து மார்புநோக்கும் விடமனத்தார் வருவார் உடன்பிறப்பென்று உடன் படிக்கையில் பயில்கையில் பயணிக்கையில் அண்ணென்றே தம்பியென்ற என்றினைத்து எவரொருவரையும் எடுத்தவுடன் ஏற்காதே! பழகும் நிலையில் தோழமை என்றெண்ணாதே! உழவும் எவர்சொல் எதனையும் ஏற்காதே! இளகும் உன்னிதயம்  இடக்குறிப்பு அறிந்துன்  நம்பிக்கை  வதைபடும்  நிலை வரலாம்! நம்பிக் கை வைக்க -ஆசி வைக்கும் தும்பிக்கையிலும் விடம் வரலாம்! வதையும் முன் வாடாதே!  வாடா மலரேனும் ஓடாதே! கூடா நட்பெதும் கூடும்முன் தெரியாதே! பல்லிலா பாம்பிடமும் பாசமெதிர் பாராதே! புல்லெனவே மிதிபடும் மழலைகளைப் பாராயோ! சொல்லொண்ணாத் துயரதை ஒருகணமும் உணராயோ! அல்லாத வேலையெல்லாம் அரங்கேறுது நாட்டகத்தில் இல்லாத ஒன்றுகருதி உக்கார்ந்திருக்கோம் நாடகத்தில். வதைபடலம் வலிபடலம...

இயற்கையை காப்போம்!

               கொரோனா கற்றுத் தந்த அனுபவம்! - கவிதை தென்பொதிகையின் தென்றல்காற்று ஆளில்லா உங்கள் தேயிலைத் தோட்டத்தைத் தாண்டி தவழ்கின்றது!. கோடிகோடியாய் இறைத்து நீங்கள் சுத்தம் செய்வதாய்க் கூறிக்கொண்ட  கங்கையிங்கே உங்கள் ஆலைகளின் அசுத்தம் நீங்கி ஆடித்திளைக்கிறது!. அரிய வகை டால்பீன்! கங்கை டால்பீன் அது அமுதகங்கையில்  இனம்பெருக்கி ஓடித்திரிகிறது! வானுயர்ந்த காடழித்து  நீங்கள் நட்டுவைத்ததாய்க் கணக்கெழுதிய மரங்கள் காணாது கணக்கை நிகர்செய்ய பறவைகள் விதைவிதைக்கக் கிளம்பின! ஆழப் புதைந்து பல ஆயிரமாய் மரங்கள் வளர! ஆழப் புதைய அங்கே காட்டுப்பன்றிகள் உழுதுகொண்டிருக்கின்றன! ஏற்றுமதி செய்தே வருவாய் ஈட்ட நீங்கள் ஓட்டிய இயந்திரங்கள் மாய்த்த காடுகளில் இன்று மரகதப்புறாக்கள் உயிர்த்தெழத் தொடங்கின! நீங்கள் சுட்ட யானைகளின் மொட்டுப் பாதங்களில் சுவர்க்கம் பூக்கப் பழகின! எங்கள் வாழ்வு திரும்ப நாங்கள் தந்த வாய்ப்பு இது என்றன!. ஆலைக் கழிவு கலக்கா ஆறுபல ஆழ்கடல் திரும்பின பாலைச் சுரம் பொசுக்க சாகும் மீன்கள் வாலை மீனோடு வாஞ்சை கொண்டன! இயற்கை உடலின்  இறந்த செல...

கொரோனா கவிதை

               கொரோனா கற்றுத் தந்த அனுபவம்! - கவிதை தென்பொதிகையின் தென்றல்காற்று ஆளில்லா உங்கள் தேயிலைத் தோட்டத்தைத் தாண்டி தவழ்கின்றது!. கோடிகோடியாய் இறைத்து நீங்கள் சுத்தம் செய்வதாய்க் கூறிக்கொண்ட  கங்கையிங்கே உங்கள் ஆலைகளின் அசுத்தம் நீங்கி ஆடித்திளைக்கிறது!. அரிய வகை டால்பீன்! கங்கை டால்பீன் அது அமுதகங்கையில்  இனம்பெருக்கி ஓடித்திரிகிறது! வானுயர்ந்த காடழித்து  நீங்கள் நட்டுவைத்ததாய்க் கணக்கெழுதிய மரங்கள் காணாது கணக்கை நிகர்செய்ய பறவைகள் விதைவிதைக்கக் கிளம்பின! ஆழப் புதைந்து பல ஆயிரமாய் மரங்கள் வளர! ஆழப் புதைய அங்கே காட்டுப்பன்றிகள் உழுதுகொண்டிருக்கின்றன! ஏற்றுமதி செய்தே வருவாய் ஈட்ட நீங்கள் ஓட்டிய இயந்திரங்கள் மாய்த்த காடுகளில் இன்று மரகதப்புறாக்கள் உயிர்த்தெழத் தொடங்கின! நீங்கள் சுட்ட யானைகளின் மொட்டுப் பாதங்களில் சுவர்க்கம் பூக்கப் பழகின! எங்கள் வாழ்வு திரும்ப நாங்கள் தந்த வாய்ப்பு இது என்றன!. ஆலைக் கழிவு கலக்கா ஆறுபல ஆழ்கடல் திரும்பின பாலைச் சுரம் பொசுக்க சாகும் மீன்கள் வாலை மீனோடு வாஞ்சை கொண்டன! இயற்கை உடலின்  இறந்த செல...

மகளே

மகளே நீ ஒருநாள்!  மலர்ப் படுக்கை வேண்டுமென்றாய்!  என் மார்புப் படுக்கை நான் நீட்ட  மரகதப்பூவாய் தூயில்கொண்டாய்! மகளே! நீ ஒருநாள்! உன் தாய் மடி தேடிச் சென்றாய்! பூமகள்தான் சுமக்கிறாளென்று நான் ஆற்றி காத்திருந்தேன்! மகளே நீ ஒருநாள்! நிலமகள் நாடிச் சொன்றாய்! பூப்பாதம் நோகுமென்று நானிருகை பிடித்துத்தூக்கி மெதுநடந்தேன் மகளே நீ ஒருநாள்  நாமகள் வேணுமென்றாய்! நோ மகளே என்றாது... ஓடிப் போய்ச் சேர்ந்து வந்தேன். மகளே நீ ஒருநாள்! கோமகன் கூட துணையென்று அழைத்து வந்தாய்!  படிப்பிற்குப் பரிசென்றாய்! உன் துணை நீதேட மகிழ்ச்சி கொண்டு ஏற்று நின்றேன். உன் போல் இரு பூ எனக்கொருநாள் ஈன்று கொடுத்தாய்! உனைச்சுமந்த மார்ப்புக் கட்டில்  மீண்டும் சுமக்க ஏன் மறுத்தாய்? விதையெனப் பாவிவைத்தேன். நாற்றென நிற்பேனென்றாய்! கதை ஒன்று சொன்னவர் பின்தான் காற்றென ஓடிச் சென்றாய்! மகளே நீ ஒருநாள்!. மாற்றுத் தோட்டம் ஏன் சென்றாய்! உன் கதிர் முளைத்த நாற்றுக்கூட... நாளை வேறுகளம் செல்லலாமே! மகளே நீ ஒருநாள்! அந்த நிலை அடைந்துவிட்டால் எந்த ஒன்றும் சொல்லாதே! எதிர்ப்பு ஒன்றும் காட்டாதே! மகளே நீ ஒருநாள்! வந்து க...

மனையடி - புதினம்

படம்
  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின்  புதிய வெளியீடான திரு இரா.செல்வம் ஐ.ஏ.எஸ் அவர்களின் பனையடி நாவல் புதிய நூல்  வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது பனையடி -நாவல்  இரா.செல்வம் ஐ.ஏ.எஸ் அவர்கள்  எழுத்து என்ன செய்து விட முடியும்? புனைவு கதை என்ன மாற்றத்தை செய்து விட முடியும்? என்று கேள்விகளை கூட முன்வைக்க தேவையில்லை. இரண்டரை மணி நேர திரைப்படம் கொடுக்கும் பாதிப்புக்களை விளைவுகளை விட ஒரு புத்தகம் சமூக மாற்றத்திற்கான விதைகளை சிறப்புறத் தூவி செல்லும். இந்திய ஆட்சி பணித்துறை அதிகாரி இரா. செல்வம் அவர்கள் எழுதிய இந்நூல் நம் தமிழ் சமூகத்து வேளான் மக்களின் துயர்களை காத்திரமாக பதிவு செய்து சமூக பிரக்ஞை கொண்ட நூலாக எழுதப்பட்டிருக்கிறது. மக்களின் கதைகள்,சமூக எதார்த்தங்கள் நிரம்பிய தன்வரலாற்று புதினமே "பனையடி"நாவல்  எளிய வேளான் குடும்பத்தில் பிறந்த இளைஞனின் வாழ்வில் நிகழ்ந்த கடுமையான தடைகளையும்,  ஒரு தந்தையின் தலைமுறை கடந்த  பெருங்கனவும் நிறைந்த காவியம் இந்நாவல். சாமான்ய இளைஞனின் எதார்த்த வாழ்க்கையில், எளிய பின்புலத்தில் இருந்து சென்று மேடேறி வாழ முற்பட...

பழமரபும் நவீனச் சாதனைகளின் புறக்கணிப்பும்.

சென்ற காணொளியில் பழைய மரபுகள்  புதிய கலை சிருஷ்டிகள் தோன்றுவதற்கு குந்தகமாக இருக்கின்றதென சு.ரா. குறிப்பிடுவதாகக் கூறினேன். அதை வாசிக்க நீங்கள் கேட்டீர்கள். ஏன் அப்படி சு.ரா குறிப்பிடுகிறார்? கேள்வி எழுப்பினீர்களா? பழைய மரபுகள் என்று சு.ரா குறிப்பிடுபவை, இலக்கியங்களின் இலக்கணங்களையோ அல்லது புலவர்கள் பின்பற்றிய வழிமுறைகளையோ அல்ல. இலக்கியங்களை நுகர்வுசெய்யும் வாசகனை, அவன்தம் மனநிலையை பழைய மரபு என்ற ஒற்றைப் பதத்தால் குறிக்கிறார் சு.ரா.. வாய்மொழி இலக்கியம் உட்பட ஏடேறிய இலக்கியங்கள் அனைத்தையும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வீட்டில் பாதுகாத்து வைத்திருந்தமை உ.வே.சா போன்றோரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து காண்கிறோம். ஒரு நல்ல படைப்பை பாதுகாக்க இன்றிருப்பது போன்ற சூழல் அன்றில்லை. இன்று யாரும் வாங்கிப் படிக்கவில்லை என்றாலும், அச்சிடப்பட்ட நூல்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இல்லியா? யாரும் விற்கவில்லை என்பதற்காக தூக்கி குப்பையில் வீசப்போவதில்லை.  எந்த நூலகத்திலும், யார் வாசிக்கா விட்டாலும் நூல்கள் என்னவோ அதே இடத்தில் பாதுகாக்கத்தான்படுகின்றன. ஆனால் இப்படியான நிலை அ...

சுந்தர எழுத்துகள்|மௌனத்தில் விரிந்த மொட்டுகள்|2

மௌனத்தில் விரிந்த மொட்டுக்கள்... -   2                                                      -  கரிசல்பாலா. சுந்தர எழுத்துகள் மூன்றாம் பகுதிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.  முன்பெல்லாம் கன்னத்தில் முத்தமிடுகிற காட்சி வந்தால் கூட குழந்தைகளின் கண்களையும் காதுகளையும் மூடிவிடுகிற பெற்றோர்களை கண்டிருப்போம். அல்லது வேகமாக ரிமோட்டை எடுத்து வேறு சேனலை மாற்றி விடுகிற பெற்றோரை பார்த்திருப்போம் இது வீட்டில். குழந்தைகள் பெண்கள், பெண்பிள்ளைகள் இருந்தால் அவர்கள் முன் தவறாகப் பேசக்கூடாது என கவனமாக இருக்கிற மனிதர்களைக் கண்டிருப்போம். அதே போல ஆண்கள் இல்லாத அல்லது தெருச் சண்டை என்று வந்து விட்டால் யாரையும் பொருட்படுத்தாது   கெட்ட வார்த்தைகளை பெண்களும் பேசிட பார்த்திருப்போம். அதை கண்டிக்கிற பெரியவர்களையும் கண்டிருப்போம் இது சமூகத்தில் .       தமிழகத்திற்கு கெட்ட வார்த்தைகள் என்று குறிப்பிடப்படக்கூடிய   சொற்கள் ஒன்றும் புதிதில்லை...